ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டது. கல்லூரி வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்து பின் வேலையும் இங்கேயே கிடைக்கவே இது என் ஊராகவே மாறிவிட்டது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு பழைய நினைவுகளை தூசி தட்டிவிடும். பள்ளி நண்பர்களிடமிருந்து புதுப்புது சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வரும். ஓய் என்று அதட்டலாக கூப்பிட்டாலே அழுதுவிடும் மாலா, பக்கத்து தெரு சுரேஷடன் ஊரை விட்டு ஓடி போலிஸ் ஸ்டேசனில் புகுந்து நான் மேஜர் என் விருப்பப்படி இவனைத் தான் கல்யாணம் செய்வேன் என்று ஊரையே கதி கலங்க செய்திருக்கிறாள். இதைப் போல பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. என் காதுக்கு தான் எல்லாம் லேட்டாக கிடைக்கிறது. இப்படி ஏதோ ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை தான் இந்த முறையும் எதிர்பார்த்து சென்றிருந்தேன். விஷயம் இருந்தது, ஆனால் அது நாதனைப் பற்றியது. நாதன், அவன் பெயர் தெரியாத மாணவரோ ஆசிரியரோ எங்கள் பள்ளியில் இருக்க முடியாது. மாநிறம், கழுத்து வரை பின் முடி நீண்டிருக்கும், முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். ஊரில் ரௌடி மாதிரி திரிந்து கொண்டிருக்கும் கல்லூரி படிக்கும் அண்ணங்களுடன் தான் எப்போதும் இருப்பான். அவனை கண்டாலே எங்களுக்கு பயமாகதான் இருக்கும். ” டேய் சுப்ரமணி மவனே, இங்க வா!” என்று எல்லாரையும் அவர்கள் அப்பா பேர் சொல்லி கூப்பிடுவான். மதிக்கவில்லை என்றால் கெட்ட வார்த்தை அர்ச்சனை தான். தவறாமல் தினமும் பள்ளிக்கு வருவான், அவன் பொழுதுபோக்கே இங்க தான்.
Nuskiya
About *அணிந்திருந்த காலணிகள்* அங்கங்கே கிழிந்தன; கற்பரல்கள் காலணிகளுக்குள் கணுக்கால்களை உறுத்தின. காரைமுட்கள் காலணியூடே கட்டாயமாய்ப்புகுந்து கால்தசை-நரம்புகளைக் குண்டூசிகளாய்த் துளைத்தன. கரடுமுரடுக் க
Hi, My Name is Hafeez. I am a webdesigner, blogspot developer and UI designer. I am a certified Themeforest top contributor and popular at JavaScript engineers. We have a team of professinal programmers, developers work together and make unique blogger templates.

0 comments:
Post a Comment