Powered by Blogger.

Search This Blog

Blog Archive


Thursday, August 26, 2021

Tag:

03 | Sample



அங்கங்கே கிழிந்தன;

கற்பரல்கள் காலணிகளுக்குள்

கணுக்கால்களை உறுத்தின.


காரைமுட்கள் காலணியூடே

கட்டாயமாய்ப்புகுந்து

கால்தசை-நரம்புகளைக்

குண்டூசிகளாய்த் துளைத்தன.



 

கரடுமுரடுக் குன்றுகள்…

கலக்கம்-நிறைக் காடுகள்…

கூரிய கோரைப்புற்புதர்கள்…

குவிந்துநிற்கும் பூச்சிப்புற்றுகள்…


அமர்ந்து அவ்வப்போது அவற்றை

அகற்றத்தான் ஆசித்து நொந்தேன்;

இயலவில்லை. எதனாலெனில்

இவைகள் கொஞ்சநஞ்சமல்ல.


எப்படியெப்படியோ முடித்து

என் இலக்கை அடைந்தபோதோ

என் இரத்த உறவினர்களுமே எனை

எள்ளிநகையாடக்கண்டேன்:



 

‘இவ்வெற்றுவேலை இவனுக்கு

இக்காலத்தில் எதற்குத்தானாம்?

இவனுக்கும்தானே இங்கு சீரான

இந்நெடுஞ்சாலைகளெல்லாமே!’


புன்னகைமட்டும் உள்ளுக்குள்

பூர்ணமாய்ப் புரிந்தேன் – எனக்கோ

புதியபாதையொன்றைக்கண்டுப்

புண்ணியம்பெற்றப் பூரிப்போ…???

Nuskiya

About *அணிந்திருந்த காலணிகள்* அங்கங்கே கிழிந்தன; கற்பரல்கள் காலணிகளுக்குள் கணுக்கால்களை உறுத்தின. காரைமுட்கள் காலணியூடே கட்டாயமாய்ப்புகுந்து கால்தசை-நரம்புகளைக் குண்டூசிகளாய்த் துளைத்தன. கரடுமுரடுக் க

Hi, My Name is Hafeez. I am a webdesigner, blogspot developer and UI designer. I am a certified Themeforest top contributor and popular at JavaScript engineers. We have a team of professinal programmers, developers work together and make unique blogger templates.

1 comments:

  1. U12
    R
    Line 03
    கால்தசை-நரம்புகளைக்
    Rules 16.3


    ReplyDelete

Main Tag AGARA

கவிதை   தோழர் கவிதை   புது கவிதை   தமிழ் கவிஞர்கள்   சஞ்சுவின் கவிதைகள்   நிரல் பலகை   கவிதை பிரிவுகள்   நிரல் பலகை   பரிசு பெற்றவை   கதை   ...

 

Responsive Image with Transparent Text

Notebook

Heading

Lorem ipsum dolor sit amet, an his etiam torquatos. Tollit soleat phaedrum te duo, eum cu recteque expetendis neglegentur. Cu mentitum maiestatis persequeris pro, pri ponderum tractatos ei.